புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள்: கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிய துணை முதல்வர் 

இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :25 செப்டம்பர் 2018, 8:36 am

கயா: இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 

ஹிந்து மத நாட்காட்டியின்படி  'பத்ரபடா' மாதத்தில் சந்திரனின் வளர் மற்றும் தேய் பருவங்களை வைத்து 16 நாட்கள் 'பித்ரு பக்ஷா' என்னும் பருவமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த பருவத்தில் ஹிந்து மக்கள் தமது முன்னோர்களுக்கு 'திதி' வழங்குவார்கள். குறிப்பாக அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படையலாக சமர்ப்பிப்பார்கள். 

இவ்வருடம் அந்த காலமானது நேற்று திங்களன்று துவங்கி வரும் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.

இந்நிலையில் 'பித்ரு பக்ஷா' பருவத்தில் உள்ள இந்த 16 நாட்களாவது அமைதியாக இருஙகள் என்று கிரிமினல்களிடம் கை கூப்பி வேண்டிக் கொள்வதாக பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியிருக்கும் வினோதம் நிகழ்ந்துள்ளது. 

பிகாரின் கயா பகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி பேசியதாவது:

'பித்ரு பக்ஷா' பருவத்தில் உள்ள இந்த 16 நாட்களாவது அமைதியாக இருங்கள் என்று கிரிமினல்கள் அனைவரிடமும் கை கூப்பி வேண்டிக் கொள்கிறேன். மற்ற நாட்களில் நீங்கள் என்ன செய்கிறீர்களாளோ அதை தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.   

ஒரு மாநிலத்தின் துணை முதல்வரே கிரிமினல்களிடம் இவ்வாறு பேசியிருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.