2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

3 காவலர்கள் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளை பிடித்தேத் தீருவோம் என காவல்துறை உறுதி

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 காவல்துறை உயர் அதிகாரிகள், 1 காவலர் என 4 பேரில் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:49 pm

ANI


ஷோபியான்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நேற்று இரவு காணாமல் போன 3 காவல்துறை உயர் அதிகாரிகள், 1 காவலர் என 4 பேரில் 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சுட்டுக் கொலை செய்யப்பட்ட காவலர்கள் நிஸார் அகமது, ஃபிர்தோஸ், குல்வந்த் சிங் ஆகியோர் என்பது தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று காஷ்மீர் மாநில காவல்துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என்று தெரிவித்தார்.

ஷோபியான் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த 3 காவல்துறை உயர் அதிகாரிகளும், 1 காவலரும் நேற்று இரவு மாயமாகினர். அவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாயமான 2 உயர் அதிகாரிகளும், 1 காவலரும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லைத் தாண்டி ஊடுருவி வந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரரைக் கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். அவரது கழுத்தை அறுத்திருந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இன்று காவல்துறையைச் சேர்ந்த 3 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சுட்டுக் கொன்றுள்ளனர்.

பயங்கரவாதிகளைத் தேடும் பணி ஷோபியான் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.