புது தில்லி: எண்ணெய் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது என்ற விபரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்களால் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக மத்திய அரசு தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு வெளிக் காரணங்ககளே காரணம் என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் எந்த அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது என்ற விபரம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:
எண்ணெய் நிறுவனங்கள் எந்த சூத்திரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயிக்கிறது? இந்த விலை உயர்வு முடிவின் பின்னணியில் உள்ள பகுப்பாய்வு தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலுமா? இந்த தினசரி விலை உயர்வின் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் முறைகேடாக லாபம் பெறுகிறதா?
எனவே இந்த தினசரி விலை உயர்வை கட்டுப்படுத்தி நியாயமான விலையை நிர்ணயிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புதனன்று இந்த மனு விசாரணைக்கு வந்த பொழுது தில்லி உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


