புது தில்லி: நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தூக்கிலிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து தில்லியில் உள்ள மகளிர் ஆணையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, தில்லி மகளிர் ஆணையம், திகார் சிறைச்சாலை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், மருத்துவத் துணைப்படிப்பு படித்து வந்த மருத்துவ மாணவி 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பேருந்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கான தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்து குறிப்பிட்டுள்ளது. தாமதம் செய்யப்படுவது குறித்து விளக்கம் அளிக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்பயா வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும்படியும், உயிரிழந்த தங்கள் மகளின் மரணத்துக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டால்தான் நியாயம் கிடைக்கும் என்றும் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தூக்குத் தண்டனை குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராமெடிக்கல் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


