பிகாரில் இப்படி: ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி
பிகார் மாநிலத்தில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்த காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சிக் காத்திருந்தது.


பிகார் மாநிலத்தில் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் வாகனத்தை சோதித்த காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சிக் காத்திருந்தது.
கட்டுக்கட்டாக பணம் நிரப்பிய பெட்டிகள் இருக்க வேண்டிய வாகனத்துக்குள் லிட்டர் லிட்டராக மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் நிரப்பப்பட்டிருந்தன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபாட்டில்கள் பிகார் மாநிலம் பொகாரோவில் இருந்து முசாபர்பூர் பகுதிக்குக் கடத்திச் செல்லும் போது பிடிபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது எந்த வங்கியின் வாகனம் என்று தகவல்கள் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...