திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

இந்துக்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் மீது வழக்குப் பதிவு

இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் தன் சிங் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2018, 9:17 am


பன்ஸ்வாரா: இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் தன் சிங் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத ரீதியாக பிரசாரம் மேற்கொண்டதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டக் குற்றத்துக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராவத், ராஜஸ்தானில் வசிக்கும் அனைத்து இந்துக்களும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்கள் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது வாக்கினை செலுத்தலாம். ஆனால் அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கு வாக்களித்து, பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த பேச்சுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.