ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது: கோவா அமைச்சர் மறுப்பால் அதிகரிக்கும் சர்ச்சை 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்திருப்பதால் சர்ச்சை அதிகரித்துள்ளது. 

News image
Updated On :25 அக்டோபர் 2018, 10:34 am

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் மறுத்திருப்பதால் சர்ச்சை அதிகரித்துள்ளது. 

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த சில மாதங்களாக முற்றிய நிலையில் உள்ள கணையப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கோவா, மும்பை, தில்லி மற்றும் நியூயார்க் என தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது கோவாவில் அவரது இல்லத்தில் மருத்துவர்களின் கணகாணிப்பில் ஓய்வில் இருக்கிறார். 

உடல்நலக்குறைபாடு இருந்த போதும் முதல்வர் பதவியில் இருந்து விலகாத அவரது போக்கு எதிர்கட்சிகளாலும், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்ககளாலும் தொடர்ந்து  விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மனோகர் பாரிக்கர் உடல்நலம் குறித்து எதுவும் கூற இயலாது என்று கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே மறுத்திருப்பதால் சர்ச்சை அதிகரித்துள்ளது. 

இதுதொடர்பாக வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பாரிக்கர் உடல்நிலை தொடர்பாக நான் எதுவும் கூற இயலாது. முதல்வர் உடல்நலமின்றி இருக்கிறார். அதுதொடர்பாக தகவல் கூறுவது அவரது குடும்பத்தார் சார்ந்த விஷயம். சுகாதாரத்துறை அமைச்சருக்கானது அல்ல. 

அதிசயங்கள் நடக்கும் என்று  எப்போதும் நம்புங்கள். எந்த வித உடல்நலக்குறைபாட்டிலும் இருந்து ஒருவர் மீண்டு வருவது என்பது மருத்துவ அறிவியலை மீறிய ஒன்றுதான். எனவே நமபிக்கையுடன் பிரார்த்தனை செய்வோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.