புது தில்லி ; கோவா மாநில சட்டப்பேரவையில் இருந்து ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
கோவாவில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில், 14 பாஜக உறுப்பினர்கள் உட்பட 23 பேரின் ஆதரவுடன் அந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரசுக்கு 16 உறுப்பினர்கள் உள்ளார்.
வடக்கு கோவாவின் மன்றேம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினரான தயாநந்த் சோப்டே (54) மற்றும் தெற்கு கோவாவின் ஷிரோடா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டவரான சுபாஷ் ஷிரோத்கர் (66) ஆகிய இருவரும்தான் தற்போது தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.
இவர்கள் தங்களது ராஜிநாமா கடிதத்தினை சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த்துக்கு பேக்ஸில் அனுப்பி வைத்துள்ளனர். அவர்களது ராஜிநாமா கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரும் உறுதி செய்துள்ளார்.
ராஜிநாமா கடிதம் அனுப்பியுள்ள இருவரும் திங்கள் இரவே தில்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதால், அவர்கள் பாஜகவில் சேர உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இருவரும் காங்கிரசில் இருந்து விலகும் அறிவிப்பு வெளிவரும் என்றும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் ராஜிநாமா செய்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இருவர் மத்திய ரயில்வே துறை மைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்
தில்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற எளிய விழாவில் அவர்களது இணைப்பு வைபவம் நடைபெற்றது.
இவர்களது ராஜிநாமாவின் காரணமாக கோவா சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 14 ஆக குறைந்துள்ளது.
கோவா மாநில முதல்வரான மனோகர் பாரிக்கர் தற்போதுஉடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசியல் நடவடிக்கைகள் சூடு பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


