ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது செருப்பு வீச்சு

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மாணவர் ஒருவர் செருப்பை வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

News image
Updated On :11 அக்டோபர் 2018, 10:10 am

பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மாணவர் ஒருவர் செருப்பை வீசிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது அமைச்சரவை சகாக்களுடன் வியாழன் அன்று காலை பாபு சப்கர் என்ற இடத்தில நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருர்ந்தார். அவர் மேடையில் அமர்ந்திருந்த பொழுது சாந்தன் குமார் திவாரி  என்ற மாணவர் நிதிஷ் குமார் மீது செருப்பு ஒன்றை வீசினார். ஆனால் அந்த செருப்பானது அவர் மீது விழாமல் சில அடி தொலைவு தள்ளி விழுந்தது. 

உடனே விரைந்து செயல்பட்ட போலீசார் அவரை வளைத்து பிடித்தனர். ஆனால் அதற்குள் ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் சிலர் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் சாந்தன் குமார் திவாரி, தான் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் என்றும், பிகாரில் ஆட்சி செய்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு எதிராக போராடுவதாகவும் தெரிவித்தார். 

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.