ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஹிந்தி நடிகர் திலீப் குமார் 

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் வீடு திரும்பினார். 

News image
Updated On :11 அக்டோபர் 2018, 10:34 am

மும்பை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் வீடு திரும்பினார். 

பிரபல ஹிந்தி நடிகர் திலீப் குமார் (95) நிமோனியா காய்ச்சல் காரணமாக மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  திலீப் குமார் வீடு திரும்பினார் என்று அவரது நெருங்கிய நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். 

திலீப் குமார் உடல்நிலை குறித்து தகவல்களை அவரது குடும்பத்தின் சார்பாக பகிர்ந்து வரும் பைசல் பரூக்கி, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

திலீப் குமார் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்கள் அவரை முழுமையாக ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். நோய்த்தொற்றினை தடுப்பதற்காக சில நாட்கள் தலைமையில் இருக்குமாறு கூறியுள்ளனர். உங்கள் அனைவரது பிராத்தனைகளுக்கும் நன்றி. 

இவ்வாறு அவர் தெரிவித்துளார்      

அந்தாஜ், ஆன், மதுமதி, தேவதாஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் திலீப் குமார்  என்பது குறிப்பிடத்தக்கது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.