மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சில பணக்காரர்களுக்காக வேலை செய்யும் பாஜக; ஏழைகளை நினைக்கும் காங்கிரஸ்: ராகுல்

இந்தியாவில் வாழும் சில பணக்காரர்களுக்காக பாஜக பணியாற்றுவதாகவும், ஏழைகளையும், விவசாயிகளின் நலனையும் புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

News image
Updated On :6 அக்டோபர் 2018, 11:36 am


இந்தியாவில் வாழும் சில பணக்காரர்களுக்காக பாஜக பணியாற்றுவதாகவும், ஏழைகளையும், விவசாயிகளின் நலனையும் புறக்கணிப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதிவாசி ஏக்தா பரிஷத் என்ற பழங்குடியினருக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ராகுல் காந்தி சனிக்கிழமை கலந்துகொண்டு பேசினார்.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பழங்குடியின மக்களின் உரிமைக்கான மசோதாவைக் கொண்டு வருவோம் என்றும் ராகுல் உறுதி அளித்தார்.

பணக்காரர்களுக்குத்தான் உதவி செய்ய வேண்டும் என்று விரும்பினால் செய்யுங்கள். ஆனால், அதே சமயம் ஏழை விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கும் உதவுங்கள் என்றும் மத்திய அரசு குறித்து ராகுல் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், பழங்குடியின மக்களுக்கான உரிமை மசோதா என்பது அவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு அல்ல, அது அவர்களது உரிமை. பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் உள்ள நிலம், தண்ணீர், வனப்பகுதியின் மீது உரிமை கொண்டவர்களாக இருப்பது அவசியம் என்றும் ராகுல் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.