புதிதாக தேர்வு செய்யப்பட்ட பெங்களூரு மாநகராட்சித் துணை மேயர் மாரடைப்பால் மரணம்
பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ரமீலா உமாஷங்கர் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார்.


பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்ட ரமீலா உமாஷங்கர் நேற்று நள்ளிரவு மாரடைப்பால் காலமானார்.
பெங்களூரு மாநகராட்சியின் துணை மேயராக தேர்வு செய்யப்பட்ட ராமலீலாவுக்கு 44 வயதாகிறது. இவர் முதல் முறையாக கவுன்சிலரானவர். கோவிந்தராஜநகர் பகுதியின் காவேரிபுரா வார்டின் கவுன்சிலராக கடந்த வாரம் இவர் தேர்வு செய்யப்பட்டார்.
நேற்று நள்ளிரவு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
பெங்களூருவில் 6 பெட்டிகள் கொண்ட இரண்டாவது மெட்ரோ ரயில் சேவையை நேற்று துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...