பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நூறாண்டு காலம் வாழ்க என்று வழக்குரைஞர்கள் பாடியதை தடுத்து நிறுத்திய தீபக் மிஸ்ரா

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இன்று மாலை அவரது பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:20 pm


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இன்று மாலை அவரது பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த தீபக் மிஸ்ராவை சந்தித்த வழக்குரைஞர்கள், நூறாண்டு காலம் வாழ்க என்ற ஹிந்திப் பாடலை ஒன்றாகப் பாடினார்கள்.

உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய தீபக் மிஸ்ரா, நான் தற்போது எனது இதயத்தில் இருந்து பேசுகிறேன். இன்று மாலை எனது மனதில் இருந்து பேசுவேன் என்று கூறிவிட்டார்.

நூறாண்டு காலம் வாழ்க என்ற பொருள்படும் 'தும் ஜியோ ஹசாரன் சால்' என்ற ஹிந்திப் படப் பாடல் 1950ம் ஆண்டு வெளிவந்தது. பொதுவாக இந்தப் பாடலை பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது பாடுவார்கள். அதனை வழக்குரைஞர்கள் தீபக் மிஸ்ராவுக்காக பாடிய போது அதனை அவரே தடுத்து நிறுத்திவிட்டார்.

இன்று ஓய்வு பெறவிருக்கும் தீபக் மிஸ்ரா, அவரது பதவிக் காலத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் சில சர்ச்சைகள் எழுந்து நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து புகார்களைக் கூறியதும் இவரது பதவிக் காலத்தில் தான்.

தகாத உறவு கிரிமினல் குற்றமாகாது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி உள்ளிட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் இவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்டன.

கூடுதல் நீதிபதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை..
1996ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஒடிஸா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

1997ம் ஆண்டு டிசம்பரில் நிரந்தர நீதிபதியானார்.

2009ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். 2010ல் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.

2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, 2017 ஆகஸ்ட் 28ல் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் தீபக் மிஸ்ரா.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.