புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும்: நவ்ஜோத் சிங் சித்து

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:04 pm

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த பாடியாலா தொகுதி எம்பி தரம்வீர் காந்தி, ஓபியம் போதைச் செடி வளர்ப்புக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, இக்கருத்துக்கு ஆதரவும், வரவேற்பும் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தரம்வீர் காந்தி மிகச் சரியான காரியத்தைச் செய்துள்ளார். எனவே நான் அவருக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். எனது உறவினர் ஓபியம் வகை போதைச் செடியை மருத்துவ ரீதியாக பயன்படுத்தி வந்தார். இதனால் நீண்ட ஆயுளுடன் இருந்தார். எனவே பஞ்சாப் மாநிலத்தில் ஓபியம் போதைச் செடி வளர்க்க அரசு அனுமதி வழங்க வேண்டும். இது ஹெராயினை விட மிகச் சிறந்தது என்றார். 

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பெருகி வரும் போதைப் பயன்பாட்டை அழிக்கும் நோக்கத்தோடு, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கும் அம்மாநில முதல்வர் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.