பாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உத்தரப்பிரதேச அரசு மீது நம்பிக்கை உள்ளது: ஆப்பிள் நிறுவன ஊழியரின் குடும்பத்தினர்

காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.

News image
Updated On :1 அக்டோபர் 2018, 9:21 am


லக்னௌ: காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆப்பிள் நிறுவன ஊழியர் விவேக் திவாரியின் குடும்பத்தினர், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துப் பேசினர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விவேக் திவாரியின் (38) மனைவி கல்பனா திவாரி, மாநில அரசின் மீது நம்பிக்கை இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தேன். தற்போது முதல்வரை சந்தித்தப் பிறகு அந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. மிகத் துயரமான சம்பவம் நடந்த போது அதை தாங்கும் சக்தியே இல்லை. தற்போதுதான் சுய உணர்வே திரும்பியது. எனது கணவர் விட்டுச் சென்ற பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் எனக் கூறினார்.

கடந்த செப்டம்பர் 29ம் தேதி, கோம்தி நகர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காரை நிறுத்தச் சொன்ன போது நிறுத்தாமல் சென்ற விவேக் திவாரி மீது காவலர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார்.

அவரது குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் விவேக் திவாரியின் தாய் பெயரில் தலா ரூ.5 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை, கல்பனா திவாரிக்கு அரசு வேலை உள்ளிட்டவை அளிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.