மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்த 15 நாட்களுக்குள் திட்டம்: அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு வேண்டுகோள்  

இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

News image
Updated On :1 அக்டோபர் 2018, 12:22 pm

புது தில்லி: இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என்றும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் புதன்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், வங்கிச் சேவை, செல்ஃபோன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவைக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதே சமயம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்ட விரோதம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை நீக்கியது. ஆதார் எண் தனித்துவமானது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இனி வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்காக 15 நாட்களுக்குள் திட்டம் ஒன்றை அளிக்குமாறு, அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

இதுதொடர்பாக ஆதார் ஆணையம் (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அலைபேசி சேவை நிறுவனங்களுக்கு அளித்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த வாரம் ஆதார் அட்டையின் பயன்பாடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அலைபேசி சேவை நிறுவனங்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன்படி இனிமேல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் ஆதார் எண் அடிப்படையிலான சரிபார்ப்பை நிறுத்துவதற்கான , விரிவான செயல் திட்டம் ஒன்றை 
15 நாட்களுக்குள் தயாரித்து அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இனிமேல் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து மாற்று அடையாள ஆவணங்களின் நகல்களை, கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும் பழைய நடைமுறைக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.