மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

அவசர உதவி: கர்ப்பிணியை ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவிய அருணாசல் ஆளுநர்

அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அருணாசலப் பிரதேச ஆளுநர் பிரிக் பி டி மிஷ்ரா தான் பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 நவம்பர் 2018, 7:09 am


இடாநகர்: அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணை அருணாசலப் பிரதேச ஆளுநர் பி டி மிஷ்ரா தான் பயன்படுத்தி வந்த ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல உதவியுள்ளார்.

இந்தத் தகவலை அருணாச்சல மாநிலத்தின் ராஜ்பவன் வெளியிட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணை ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், ஆளுநரே உடனடியாக இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை வரவழைத்து அதில் அனுப்பிவைத்துள்ளார்.

அதோடு நின்றுவிடாமல், அவர் செல்லும் மருத்துவமனையின் பெண் மருத்துவரை அழைத்து வரவும் உடனடியாக ஆம்புலன்ஸை அனுப்பியுள்ளார். உடனடியாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் மூலம் குழந்தைப் பிறந்துள்ளது.

கர்ப்பிணிப்பெண் இருந்த தவாங்கில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய இடாநகருக்கு சாலை மார்கமாகச் செல்ல 15 மணி நேரம் ஆகும். ஹெலிகாப்டரில் 2 மணிநேரத்தில் சென்றதால் தாயும் - சேயும் பத்திரமாக வீடு திரும்பினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.