நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

வெள்ள நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும்: பினராயி விஜயன்

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:45 pm

ENS

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டு அழுத்தம் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது இதுகுறித்து விளக்கமளித்தவர் கூறியதாவது,

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.600 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. மேலும் மத்திய பொதுவிநியோக வழங்கல் திட்டத்தின் கீழ் 89,540 மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசிடம் அப்போதே ரூ.5,616.77 கோடியும், கூடுதல் உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் கோடியும் நிதி கோரி கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், பாதிப்புகளில் இருந்து மறுசீரமைப்புக்காக ரூ.31 ஆயிரம் கோடி குறைந்தபட்ச நிதி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.