புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

திருநங்கை வேட்பாளர் திடீர் மாயம்: கடத்தல் காரணமாக இருக்கலாம் என பரபரப்பு

தெலங்கானாவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :28 நவம்பர் 2018, 10:09 am

தெலங்கானாவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பகுஜன் இடதுசாரி அமைப்பு சார்பாக சந்திரமுகி எனும் திருநங்கை கோஷாமஹால் தொகுதியல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை முதல் அவர் திடீரென மாயமானதால் அப்பகுதியில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அப்பகுதி திருநங்கை அமைப்புக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அன்றைய தினம் காலை 7 மணியளவில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவு தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களுக்கும் பதிலளித்துள்ளார். ஆனால், அவரது வீடு பூட்டியிருந்ததாகவும், செல்போன் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக திருநங்கை செயல்பாட்டாளர் பிட்டு கார்த்திக் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காத மற்றும் திருநங்கை சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே சிலர் அவரை கடத்தியிருக்கலாம் எனவும் கார்த்திக் தெரிவித்தார். திருநங்கை சந்திரமுகி வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.