நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

காசநோயாளிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:44 pm

ENS

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோயை அழிக்கும் விதமாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாகவும் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியான ஒடிஸாவில் அம்மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புதிய செயலி மூலம் காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை உடனுக்குடன் பெறும் நடைமுறை தொடர்பான வசதியை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒடிஸாவில் 50 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிரதாப் தெரிவித்தார். 

மேலும் இந்த செயலியின் மூலம் காசநோயாளிகளை எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை உடனடியாக அளிக்க எளிமையாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.