புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

காசநோயாளிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

News image
Updated On :27 நவம்பர் 2018, 9:39 am

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோயை அழிக்கும் விதமாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாகவும் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியான ஒடிஸாவில் அம்மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புதிய செயலி மூலம் காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை உடனுக்குடன் பெறும் நடைமுறை தொடர்பான வசதியை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒடிஸாவில் 50 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிரதாப் தெரிவித்தார். 

மேலும் இந்த செயலியின் மூலம் காசநோயாளிகளை எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை உடனடியாக அளிக்க எளிமையாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.