திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

காங்கிரஸுக்கு தலைமையும் கிடையாது, கொள்கையும் கிடையாது: அமித் ஷா

ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார்.

News image
Updated On :27 நவம்பர் 2018, 11:02 am

ராஜஸ்தானில் நடைபெற்ற பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சி குறித்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சித்தார். ராஜஸ்தான் மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில் அங்கு ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜலோர் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

அனுமதியின்றி சட்டவிரோதமாக குடியேறிவர்கள் நிச்சயம் வெளியேற்றப்படுவார்கள். இது பாஜக தேர்தல் அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சிதான் அமையும். இதை நான் உறுதியுடன் தெரிவிக்கிறேன். வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக ஆட்சி மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளது. அதன்மூலம் வளர்ச்சிக்கான பாதையில் செல்கிறது. 

காங்கிரஸ் கட்சி எந்த திட்டமும் இன்றி இத்தேர்தலை சந்திக்கிறது. இங்கு ஆட்சியமைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சி கனவு காண்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையும் கிடையாது, கொள்கையும் கிடையாது. அதேபோன்று வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் மத்தியில் நிச்சயம் பாஜக ஆட்சி மீண்டும் அமையும்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.