நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

தெலங்கானா: தேர்தல் பிரசார ஜுரத்தால் விவசாயக் கூலிக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல்

தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:42 pm

ENS


கம்மம்: தெலங்கானாவில் உள்ள கூலித் தொழிலாளர்களுக்கு தீபாவளி என்றால் அது தேர்தல் காலம்தான்.

தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்று கோஷம் எழுப்ப கூலி தொழிலாளர்களை பல்வேறு அரசியல் கட்சியினரும் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றுவிடுகின்றனர்.

உணவு, பணம் என கூலித் தொழிலாளர்களுக்கு தேர்தல் காலம்தான் உண்மையிலேயே தீபாவளித் திருவிழாக்காலம்.

ஆனால், கூலித் தொழிலாளர்கள் எல்லாம் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று விடுவதால் விவசாய வேலைக்கும், கட்டடத் தொழிலுக்கும் ஆட்கள் கிடைக்காமல் போய்விடுகிறது.

இது பற்றி கூலித் தொழிலாளி கூறுகையில், பிரசாரத்துக்குச் சென்றால் ஒருவருக்கு ரூ.500 கொடுக்கிறார்கள். அதுவும் சும்மா உட்கார்ந்திருக்க. கூலி வேலைக்குச் சென்றால் நாள் முழுவதும் வேலை செய்தாலும் ரூ.300 தான் கூலி கிடைக்கும் என்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.