திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தில்லி முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி வீச்சு: இளைஞர் கைது 

தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :20 நவம்பர் 2018, 12:03 pm

புது தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவாலின் அலுவலகத்திற்கு அருகில் அவர் மீது மிளகாய்ப்பொடி வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தில்லி தலைமைச் செயலகத்தின் உள்ளே முதல்வர் கேஜரிவாலின் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு செவ்வாயன்று புகுந்த அனில்குமார் என்ற இளைஞர், வெளியில் வந்த முதல்வர் கேஜரிவாலின் மீது மிளகாய்ப்பொடியை வீசினார். விரைந்து செயல்பட்ட போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக தில்லி மாநில ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

முதல்வர் மீதான இந்த தாக்குதலில் அவரது கண்ணாடி கீழே விழுந்து உடைந்துள்ளது. இது சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்புக் குறைபாடு என்பதைத் தவிர வேறில்லை. ஒருவேளை தாக்க வந்தவர் வேறு ஏதேனும் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்தால், என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். யார் ஆபத்து நேராமல் காப்பது?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.