தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உ.பி.யில் 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம்: அதிர்ச்சியடைந்த கணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது குறித்து அவரது கணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:39 pm

ANI


சிதாபுர்: உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது குறித்து அவரது கணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சந்தீப் குமார், தனது மனைவியின் செல்போனுக்கு வந்த தகவலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் மனைவியின் வங்கிக் கணக்கில் விதவைகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.3,000 சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்குள், தனது மாமியார், மற்றும் சில  பெண்களுக்கும் கணவர் உயிரோடு இருக்கும் போதே விதவைகளுக்கான ஓய்வூதியம் வந்திருப்பதாக செய்திகள் வந்திருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக புகார்  அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் பதில்  அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.