மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

காங்கிரஸ் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? மோடி சவால்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவிருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2018, 9:13 am


அம்பிகாபுர்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவிருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நாங்கள் நம்புவோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

நான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு சவால் விடுகிறன். அந்த கட்சியிலேயே காந்தியின் குடும்பத்தைச் சேராத சில நல்லத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை தலைவர்களாக்கிக் காட்டட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 4 தலைமுறைகளாக நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டுள்ளது. அப்போது அந்த கட்சி செய்த விஷயங்கள் என்ன என்பதை பட்டியலிடட்டும். இந்தியாவில் உள்ள ஏழைகளின் கஷ்டம் என்னவென்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அது கஷ்டமும் கூட. ஆனால் ஒரு தேனீர் விற்பனையாளரால் நிச்சயம் உணர முடியும் என்றும் மோடி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.