மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ரஃபேல் ஒப்பந்தம்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு

ரஃபேல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:15 am


புது தில்லி: ரஃபேல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.

ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரங்கள் என்று தலைப்பிட்டு அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான விதிமுறைகள் - 2013 அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் வாங்குவதற்கான ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரஃபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.