மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழாவுக்கு பாஜக எதிர்ப்பு: முதல்வர், துணை முதல்வர் புறக்கணிப்பு

கர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், விழாவை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வரும் புறக்கணித்துள்ளனர்.

News image
Updated On :10 நவம்பர் 2018, 9:51 am


பெங்களூரு: கர்நாடகாவில் இன்று திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், விழாவை முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வரும் புறக்கணித்துள்ளனர்.

திப்பு சுல்தானின் பிறந்ததினத்தை திப்பு ஜெயந்தி விழாவாகக் கொண்டாட காங்கிரஸ் திட்டமிட்டது. ஆனால், இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களையும் நடத்தியது.

இந்த நிலையில், திப்பு ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வராவும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டனர். மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக விழாவில் பங்கேற்கவில்லை என்று குமாரசாமி தரப்பிலும், ஊரிலேயே இல்லை என்று பரமேஸ்வரா தரப்பிலும் விளக்கம் கூறப்படுகிறது.

ஆளும் கூட்டணிக் கட்சியில் ஏற்பட்டிருக்கும் பூசல் மற்றும் திப்பு சுல்தானின் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதில் ஏற்பட்ட கருத்து மோதல்களுமே, முதல்வரும், துணை முதல்வருமே நிகழ்ச்சியை புறக்கணிக்கக் காரணம் என்கிறது தகவல் அறிந்த வட்டாரங்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.