திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பிரதமர் மோடி தீபாவளிப் பண்டிகையை எங்கே கொண்டாடப்போகிறார் தெரியுமா?

தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :5 நவம்பர் 2018, 8:35 am


புது தில்லி: தீப ஒளிகளின் பண்டிகையான தீபாவளிப் பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற கேதார்நாத்தில் கொண்டாட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன், பாதுகாப்புப் படை வீரர்களுடன், சியாச்சினில் என நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கொண்டாடி வருகிறார்.

கடந்த ஆண்டு பிஎஸ்எஃப் படை வீரர்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போராவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிய மோடி, பிறகு கேதார்நாத் சென்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

2016ம் ஆண்டு இமாச்சலில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடினார் மோடி.

2015ம் ஆண்டு அமிருதசரஸில் உள்ள காஸாவில் டோக்ராய் போர் நினைவிடத்தில் தீபாவளியைக் கொண்டாடினார்.

2014ம் ஆண்டு சியாச்சினில் உள்ள ராணுவ முகாமுக்கு திடீர் வருகை அளித்த மோடி, உலகின் மிக உயரமான போர்ப் பகுதியில் தீபாவளியைக் கொண்டாடினார்.

இந்த ஆண்டு நாளைய தினம் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.