குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

வாடிக்கையாளர்களின் விவரங்களை 3-ஆம் நபரிடம் பகிரவில்லை: பேடிஎம் விளக்கம்

இந்திய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பேடிஎம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:08 pm

Raghavendran

இந்திய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக பேடிஎம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கமளித்துள்ளது.

டிஜிட்டல் முறை பணப்பரிவர்தனைகளுக்கு பேடிஎம் செயலி மிகப் பிரபலமானது. இதன்மூலம் சாதாரண முதல் பெரிய நிறுவனங்கள், வங்கிகள் வரையில் பணப்பரிவர்தனை செய்ய முடியும். இந்நிலையில், தங்களிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை இந்நிறுவனம் 3-ஆம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டதாவது:

எங்களுடைய வாடிக்கையாளர்களின் தனிநபர் விவரங்களை நாங்கள் 3-ஆம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக விடியோக்கள் வெளியாகியுள்ளன. இது முற்றிலும் பொய் மற்றும் தவறான தகவலாகும். பேடிஎம் நிறுவனத்தைப் பொருத்தவரையில் உங்கள் விவரங்கள் உங்களிடம் தான் இருக்கும். அவை எங்களிடமோ, 3-ஆம் நபரிடமோ, அரசிடமோ இல்லை.

எங்களுடைய சட்டதிட்டங்களின் அடிப்படையில் குறிப்பிட்ட விசாரணைகளுக்கு மட்டுமே உங்களுடைய தகவல்கள் சட்டத்துறையிடம் வழங்கப்படும். மற்றபடி உங்களின் விவரங்களை பகிருமாறு நீங்கள் எந்த இடத்திலும் எங்களிடம் அனுமதி வழங்கவில்லை. இதுவே வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் இடையிலான நம்பிக்கை.

இதுபோன்ற தவறான வதந்திகளைப் பரப்புவோர் பேடிஎம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரோ அல்லது அதன் ஊழியரோ கிடையாது. அவர்களுக்கு எங்கள் சட்டதிட்டங்கள் தெரியாது. இந்தியாவில் பேடிஎம் நிறுவனத்தில் இணைந்துள்ள 300 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்களும் பாதுகாப்பாக உள்ளது என்று
தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.