குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் பிரதமரின் புரட்சி: வெங்கய்ய நாயுடு

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியன பிரதமரால் ஏற்படுத்தப்பட்ட புரட்சிகர நடவடிக்கைகள் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:07 pm

Raghavendran

நாடு முழுவதும் ஊழலை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு போன்ற புரட்சிகர நடவடிக்கைளை மேற்கொண்டார் என்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

திரிபுரா பல்கலைக்கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விழா 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. இதில் 142 ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு வழங்கப்பட்டது. சுமார் 400 மாணவர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார். மேலும் திரிபுரா ஆளுநர் டதகடா ராய், திரிபுரா கல்வித்துறை அமைச்சர் ரத்தன் லால் நாத், துணை வேந்தர் அஞ்சன் குமார் ஜோஷ், பதிவாளர் சாந்தி தேப் ராய் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, இதில் பேசியதாவது:

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றை அமல்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 1.4 லட்சம் கோடி வரி வருவாய் ஏற்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் கூடுதல் வருவாய் கிடைக்கும் என நம்புகிறேன். 

தற்போதைய மத்திய அரசின் நடவடிக்கைகளால் தான் வடகிழக்கு மாநிலங்களின் உள்கட்டமைப்பு மேம்பட்டு இதர பகுதிகளுக்கான போக்குவரத்து சேவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகமும், பெருளாதாரமும் வலுப்பெற்று வருகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.