குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

18 பழந்தின்னி வௌவால்கள் திடீர் மரணம்: ஹிமாச்சலத்தில் நிபா வைரஸ் பீதி

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 பழந்தின்னி வௌவால்கள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் நிபா வைரஸ் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:07 pm

Raghavendran

ஹிமாச்சல பிரதேசத்தின் நாஹன் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் 18 பழந்தின்னி வௌவால்கள் புதன்கிழமை திடீரென உயிரிழந்தன. இச்சம்பவம் காரணமாக அப்பகுதி மக்களிடையே நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட துணைக் கமிஷனர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர். மேலும் நிபா வைரஸ் பீதி என்பது வதந்தி என்றும் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர்.சஞ்சய் ஷர்மா கூறுகையில்,

இங்கு ஒவ்வொரு ஆண்டும் வௌவால்கள் வருகை தரும் என பள்ளி முதல்வர் மற்றும் மாணவர்கள் தெரிவித்தனர். அதில் இம்முறை வழக்கத்தை விட அதிகளவிலான வௌவால்கள் வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளோம் என்றார். 

வௌவால்கள் இறப்பு குறித்து அந்தப் பள்ளியின் முதல்வர் சுபர்ணா பரத்வராஜ் தெரிவித்ததாவது:

இங்கு ஏற்பட்டுள்ள வௌவால்களின் இறப்பு இங்குள்ளவர்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல நிபா வைரஸ் தாக்குதல் தொடர்பான அச்சத்தையும் மறுத்துவிட முடியாது. மாணவர்களிடத்தில் நிபா வைரஸ் குறித்து சரியான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தற்காப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து அனைவரிடத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.