தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் வருகை:  இணைய சேவை ரத்து; பள்ளி கல்லூரிகள் மூடல் 

பிரதமர் மோடியின் ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:05 pm

IANS

ஸ்ரீநகர்: பிரதமர் மோடியின் ஒரு நாள் ஜம்மு காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சனிக்கிழமை பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். லடாக் பகுதியில் உள்ள லே விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் வோரா மற்றும் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகிய இருவரும் வரவேற்றனர் 

அவரது வருகையையொட்டி, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்ரீநகர், லே இடையேயான நெடுஞ்சாலையில் ஜோஜிலா சுரங்கப் பாதை அமைக்கும் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும் இருவேறு சாலை திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார். மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் பிரதமர் மோடியுடன் செல்லவிருக்கிறார். காஷ்மீரின் குரேஸ் பகுதியில் 330 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் கிசென்கங்கா மின்சார திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

14 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் ஜோஜிலா சுரங்கப் பாதை, நாட்டிலேயே நீளமானதாகவும், ஆசியாவிலேயே நீளமான இருவழி சுரங்கப் பாதையாகவும் இருக்கும். எந்தவிதமான தட்பவெப்ப சூழ்நிலையிலும் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இந்த சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. இந்த சுரங்கப் பாதையை அமைக்க பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சகம் ரூ.6,800 கோடியை ஒதுக்கியுள்ளது. கண்காணிப்பு கேமராக்களுடன் நவீன பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அப்பகுதியில் இணைய சேவை ரத்து செய்யப்பட்டு, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினைவாதிகள் ஸ்ரீநகரில் மையப் பகுதியில் உள்ள லால் சவுக் பகுதிக்கு பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சையத் அலி கிலானி, மிர்வாய்ஸ் உமர் பாரூக் உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதே போல் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதி முழுவதும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பல் பகுதிகளில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.