புதுதில்லி: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'ஆப்' மூலம் உறுப்பினர் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பெயரிலான அலைபேசி செயலி கடந்த 2015–ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது இந்த செயலியில் உள்ள பொதுமக்களின் சுய விவர தகவல்கள் திருடப்பட்டு உள்ளது தொடர்பாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியினை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி இருந்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ 'ஆப்' மூலம் உறுப்பினர் தகவல்களை சிங்கப்பூர் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
என்ன ராகுல் காந்தி அவர்களே! உங்கள் குழுவினர் நீங்கள் கூறியதற்கு எதிராக செயல்பட்டு விட்டார்கள் போல் இருக்கிறது? பிரதமரின் 'நமோ' ஆப்புக்கு பதிலாக உங்கள் கட்சியின் 'வித்ஐஎன்சி' ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறதே?
இவ்வாறு தெரிவித்த அவர் அதற்கு ஆதராமாக சில ஸ்க்ரீன்ஷாட்டுகளையும் பகிர்ந்திருந்தார்.
அத்துடன் மற்றொரு ட்வீட்டில் அவர் கூறியதாவது:
காங்கிரஸ் ஆப்பின் தகவல்கள் சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றின் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாட்டைச் சேர்ந்த யார் வேண்டுமானாலும் அதனை பயன்படுத்த இயலுமே? இதைப்பற்றி நீங்கள் பதில் அளிக்க கவலைப்படுவீர்களா?
இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த சர்ச்சை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியின் 'வித்ஐஎன்சி' ஆப் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டதால் திங்களன்று காலை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து அதனை நீக்கி விட்டோம். அது அடிப்படையாக உறுப்பினர் சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்பொழுது வேறு ஒரு தளத்திற்கு உறுப்பினர் சேர்க்கை மாற்றப்பட்டது. எனவே கடந்த ஐந்து மாதங்களாக அந்த ஆப் பயன்பாட்டிலும் இல்லை.
இவ்வாறு காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


