திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வெளிநாட்டிற்கு ஆள் கடத்தல் வழக்கு: பிரபல இந்திய பாப் பாடகருக்கு இரண்டு ஆண்டு சிறை! 

பணத்தினைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு ஆள் கடத்தல் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், பஞ்சாபினைச் சேர்ந்த பிரபல  பாப் பாடகர் தலெர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2018, 11:19 am

சண்டிகர்: பணத்தினைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு ஆள் கடத்தல் செய்வதாகத் தொடரப்பட்ட வழக்கில், பஞ்சாபினைச் சேர்ந்த பிரபல  பாப் பாடகர் தலெர் மெஹந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

பஞ்சாபினைச் சேர்ந்தவர் பிரபல 'பாப்' பாடகர் தலெர் மெஹந்தி. தனியாக பாப் ஆல்பங்களை வெளியிட்டுள்ளதுடன், பாலிவுட் படங்களிலும் பாடல்கள் பாடியுள்ளார். இவர் மீது வெளிநாட்டிற்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தச் செல்லும் பொழுது, இசைக்குழுவினர் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கடந்த 2003-ஆம் ஆண்டில் பக்ஷிஸ் சிங் என்பவர் பாட்டியாலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னிடம் ஒருகோடி ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்ட தலெர் மெஹந்தி, சொல்லியபடி வெளிநாட்டுக்குஅழைத்துச் செல்லவில்லை என்றும், திரும்பக் கேட்ட பொழுது பணத்தினை திரும்ப அளிக்கவில்லை என்றும் புகார் அளித்தார்.

உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலெர் மெஹந்தி கைது செய்யப்பட்டார். ஆனால் சில நாட்களிலேயே அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் பாட்டியாலா நீதிமன்றம் வெள்ளியன்று தலெர் மெஹந்தியை குற்றவாளி என்றுஅறிவித்தது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.