2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

சிபிஎஸ்இ 12வது கணக்குப்பதிவியல் வினாத்தாள் அவுட்: விசாரணைக்கு உத்தரவு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப் பதிவியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முன்பே வெளியானதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:29 pm

IANS

புது தில்லி: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப் பதிவியல் தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முன்பே வெளியானதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கணக்குப்பதிவியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரணை நடத்துமாறு கல்வித் துறை இயக்குநரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு கணிக்குப்பதிவியல் வினாத்தாள்களின் புகைப்படங்கள் தேர்வுக்கு முன்கூட்டியே வாட்ஸ்-அப்களில் பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னதாக, தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் தருண் நரங் தனது சமூக வலைத்தளத்தில், சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக்கான வேதியியல் விடைத்தாள்கள் அடங்கிய பார்சல் சீல் வைக்கப்பட்டு தில்லி மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டதை தான் பார்த்ததாக பதிவு செய்திருந்தார்.

இப்படி எந்த பாதுகாப்பும் இல்லாமல் மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் மெட்ரோ ரயிலில் அதுவும் ஒரே ஒருவரால் எடுத்துச் செல்லப்படுவது நிச்சயம் பாதுகாப்பாற்ற நிலையையே காட்டுகிறது. அதுவும் பொது போக்குவரத்தில் கொண்டு செல்வது என்பது ஏற்க முடியாதது என்று தெரிவித்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.