2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிரதமர் மோடியின் பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் கைது! 

பிரதமர் மோடியின் விரிவான வாரணாசி பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:28 pm

IANS

வாரணாசி: பிரதமர் மோடியின் விரிவான வாரணாசி பயணத்திட்டத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக இளைஞர் ஒருவரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். 

பிரதமர் மோடி சமீபத்தில் தனது சொந்தத் தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்தார். அப்பொழுது அவர் எந்த சமயத்தில் என்ன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என்பது தொடர்பான விரிவான பயணத்திட்டம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது.

இது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படைப் பிரிவினர் உத்தரபிரதேச மாநில அரசிடம் புகார் செய்தனர். பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர் அனுப் பாண்டே என்பவரைக் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட அனுப் பாண்டேவின் பெற்றோர்கள் காவல்துறையினரிடம் அனுப் பாண்டே இரண்டு வருடங்களுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் சமூக ஊடகக் குழுவில் பணியாற்றியதாகவும், ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட காரணத்தால் வாரணசிக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கைது செய்ப்பட்டுள்ள அனுப் பாண்டே பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரதமர் மோடியால் பின்தொடரப்படும் 1932 பேரில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.