புது தில்லி: தனது மகளைக் காப்பாற்றவே பி.என்.பி வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மவுனம் சாதிக்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
பி.என்.பி வங்கி விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஏன் மவுனம் சாதிக்கிறார் என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது. தனது வழக்கறிஞர் மகளைக் காப்பற்றவே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறார். கைதாவதற்கு ஒரு மாதம் முன்னதாக குற்றவாளி நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து அவரது மகளின் சட்ட நிறுவனத்திற்கு, சட்ட ஆலோசனைக்காக பெருமளவு பணம் வழங்கப்பட்டுள்ளது. நீரவ் மோடியுடன் தொடர்புடைய பிற சட்ட ஆலோசனை நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஆனால் அவர் மகளது நிறுவனத்தில் ஏன் நடத்தப்படவில்லை?
இவ்வாறு ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் 'தி வயர்' என்னும் ஆங்கில செய்தி இணையதளத்தின் செய்தி ட்வீட் ஒன்றையும் அவர் தனது ட்வீட்டில் இணைத்து வெளியிட்டிருந்தார். அதில் "இன்னும் வெளிவரவே இல்லாத ஒரு செய்தியை ஆளும்கட்சித் தரப்பு மறுக்க முயற்சிக்கும் பொழுதே , நீங்கள் சரியான காரியத்தைத்தான் செய்கிறீர்கள் என்பது தெளிவாகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் இணைப்பாக உள்ள செய்தியில் 'தி வயர்' தளமானது தெரிவித்துள்ளதாவது:
நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து ஜேட்லியின் மகளின் சட்ட நிறுவனத்திற்கு, சட்ட ஆலோசனைக்காக பெருமளவு பணம் வழங்கப்பட்டது தொடர்பாக எங்களுக்குக் கிடைத்த ஒரு தகவலின்படி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மகள் மற்றும் அவரது கணவர் இணைந்து நடத்தும் சட்ட நிறுவனத்திற்கு, விளக்கம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பி இருந்தோம்.
அதற்கு ஜேட்லியின் மருமகன் ஜெயேஷ் பக்ஷி, நீரவ் மோடியின் நிறுவனத்திடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில், அவர்களது நிறுவனத்திற்காக சட்ட ஆலோசனைகள் வழங்கக் கோரி விண்ணப்பம் மற்றும் தொகை வந்திருந்ததாகவும், ஆனால் அது தொடர்பாக எந்த விதமான வேலைகளிலும் ஈடுபடும் முன்னரே குறிப்பிட்ட நிறுவனம் வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ள விபரம் தெரிய வந்ததும், உடனடியாக இவ்வருட துவக்கத்திலேயே வாய்ப்பை மறுத்து திருப்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


