அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

'ஸ்வச் பாரத்' திட்டம் இருக்கும் வரை இவரது பங்களிப்பை மறக்க முடியாது: யாரைச் சொல்கிறார் மோடி தெரியுமா?  

'ஸ்வாச் பாரத்' திட்டம் இருக்கும் வரை குன்வர் பாய் என்னும் மூதாட்டியின் பங்களிப்பை மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

DIN

புதுதில்லி: 'ஸ்வாச் பாரத்' திட்டம் இருக்கும் வரை குன்வர் பாய் என்னும் மூதாட்டியின் பங்களிப்பை மறக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை ஒட்டி பிரதமர் மோடி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது

இந்தியாவில் ஏராளமான பெண்கள் மனிதநேயம் எனும் வரலாற்றில் தங்களது தியாகத்தின் மூலம் மறக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளனர்.  நீங்கள் கூட உங்கள் வாழ்வில் உங்களை பாதித்த, தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் குறித்து ‘#SheInspiresMe’ என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எழுதுங்கள்.

இன்று நான் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் 'ஸ்வச் பாரத்' திட்டத்துக்கு முன்னோடியாக இருந்தவர் சட்டீஸ்கர் மாநிலம், கோத்தாபாரி கிராமத்தைச் சேர்ந்த குன்வர் பாய் என்ற 106 வயது மூதாட்டி. தனது முதிய வயதிலும் தனக்கு இருந்த ஒரே சொத்தான ஆடுகளை விற்பனை செய்து அவர் இரண்டு கழிப்பறைகள் கட்டினார். இன்று அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவரின் தியாகம் நினைவில் இருக்கிறது.

ஸ்வச் பாரத் திட்டம் இருக்கும்வரை குன்வர் பாயின் பங்களிப்பை மறக்க முடியாது. அவரின் பங்களிப்பு என்னை நெகிழச் செய்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்துக்கு நான் சென்றிருந்த பொழுது குன்வர் பாயிடம் ஆசிபெறும் வாய்ப்பு கிடைத்தது.

மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்புடன் செயல்படும் அனைவரின் மனதிலும், சிந்தனையிலும், எப்போதும் குன்வர் பாய் வாழ்ந்து கொண்டு இருப்பார். குன்வர் பாய்தான் என்னை ஈர்த்தவர்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.