2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நாகாலாந்து முதல்வரானார் நீபியு ரியோ: முதல் முறையாக ராஜ் பவனுக்கு வெளியே பதவியேற்பு விழா

நாகாலாந்தின் புதிய முதல்வராக தேசியவாத மக்கள் முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:26 pm

IANS


கோஹிமா: நாகாலாந்தின் புதிய முதல்வராக தேசியவாத மக்கள் முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு நாகாலாந்து மாநில ஆளுநர் பீ.பி. ஆச்சார்யா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். நீபியு ரியோவுடன் 11 அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நாகாலாந்தில் முதல் முறையாக ராஜ்பவனுக்கு வெளியே முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. நீபியு ரியோ, கோஹிமாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் என்டிபிபி - பாஜக கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியது. என்டிபிபி கட்சி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், இக்கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை விட ஒரு இடம் குறைவாகவே இருந்தது.

மாநிலத்தில் இதுவரை ஆட்சி புரிந்த முதல்வர் ஜீலியாங் தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் மற்றொரு இடத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, புதிய அரசை அமைக்க அழைப்பு விடுக்குமாறு நீபியூ ரியோ, ஜீலியாங் ஆகிய இருவருமே ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவிடம் உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களின் கையொப்பத்தை சமர்ப்பிக்குமாறு இருவருக்கும் ஆளுநர் உத்தரவிட்டார். 

அதன்படி, என்டிபிபி கட்சித் தலைவர் நீபியூ ரியோ தனக்கு ஆதரவளிக்கும் தன் கட்சியின் 18 எம்எல்ஏக்கள், பாஜகவின் 12 எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, ஐக்கிய ஜனதாதளத்தின் ஒரு எம்எல்ஏ ஆகியோரின் கையொப்பத்தைப் பெற்று ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாநிலத்தின் புதிய முதல்வராக நீபியூ ரியோவை நியமித்தார். வரும் 16ஆம் தேதிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ரியோவை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், நீபியூ ரியோ இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.