டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மேகாலய முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்பு

மேகாலயத்தின் முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:24 pm

ANI


ஷில்லாங்: மேகாலயாத்தின் முதல்வராக தேசிய மக்கள் கட்சித் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

மேகாலயாத்தின் முதல்வர் கான்ராட் சங்மாவுடன் அவரது அமைச்சரவை சகாக்களும் பதவியேற்றுக் கொண்டனர். ஷில்லாங்கில் நடைபெற்ற இவ்விழாவில், பாஜக தேசியச் செயலர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேகாலயத்தில் ஆட்சியமைக்கும்படி தேசிய மக்கள் கட்சி (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மாவுக்கு ஆளுநர் கங்கா பிரசாத் நேற்று அழைப்பு விடுத்தார். இதையடுத்து, மேகாலயத்தில் கான்ராட் சங்மா தலைமையில் புதிய அரசு இன்று பதவியேற்றுக் கொண்டது.

மேகாலய மாநில சட்டப் பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 19 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக முன்னணி (யூடிபி) 4 தொகுதிகளிலும், பாஜக, மலைப்பகுதி மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் வென்றன. சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற முறையில் தங்களை முதலில் ஆட்சியமைக்கும்படி அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து காங்கிரஸ் வலியுறுத்தியது.

அதேபோல், காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து என்பிபி தலைமையில் ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டது. இதுதொடர்பாக பிற சிறிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, என்பிபி கட்சித் தலைமையில் கூட்டணி அரசு அமைக்க சிறிய கட்சிகள் ஆதரவு அளித்தன.

இதனால், ஆளுநர் கங்கா பிரசாத்தை என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சந்தித்து, தன்னை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது அவர் கூறுகையில், 'என்பிபி 19 எம்எல்ஏக்கள், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 6, மக்கள் ஜனநாயக முன்னணி 4, மலைப்பகுதி மக்கள் கட்சி 2, பாஜக 2, சுயேச்சை 1 ஆகிய 34 எம்எல்ஏக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார்.

இதுபோல், காங்கிரஸ் கட்சியும், என்பிபி கட்சியும் பரஸ்பரம் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்து கோரிக்கைகள் விடுத்தன. இதனால், மேகாலயத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கப் போகிறார் என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், என்பிபி தலைவர் கான்ராட் சங்மாவை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் கங்கா பிரசாத் திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.