சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

மத்தியில் 3-ஆவது அணி: முதல்வரின் கருத்துக்கு ஓவைஸி ஆதரவு!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்த கருத்துக்கு ஓவைஸி ஆதரவு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

Raghavendran

வருகிற 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க 3-வது அணி ஒன்று தேவை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதற்கு ஏஐஎம்எம் கட்சித் தலைவர் அசாசூதின் ஓவைஸி ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஓவைஸி மேலும் கூறியதாவது:

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு மாற்றம் தேவை என்னும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். தேசிய அளவில் அந்த இரு கட்சிகளுக்கும் மாற்று இல்லாத காரணத்தால் அது இத்தனை நாள் தள்ளிப்போனது. ஆனால் தற்போது அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. 

எனவே இந்த 3-ஆவது அணி அமைக்க நான் ஆதரவு தெரிவிக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். எனவே அவரால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியம் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க 3-வது அணி ஒன்று தேவை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியயோடு, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க ஒரு 3-வது அணி அவசியம் என்றார்.

முன்பு மொரார்ஜி தேசாய், பி.வி.சிங், தேவகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத ஒரு அணியால் தரமுடியும். வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.