மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: கல்வீச்சு சம்பவத்தில் ஒரு சிறுவன் சாவு

ஜம்மு-காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:05 pm

IANS

ஜம்மு-காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் பரவியுள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் விதமாக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கு நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும், அங்கு இந்திய ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தான். கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய பதிலடியில் மேலும் 8 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், புலவாமா மாவட்டத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க இணைய வசதியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.