ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

லாலு பிரசாத் யாதவின் மகன் அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்பட போஸ்டர் வெளியீடு 

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2018, 9:43 am

பாட்னா: பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிந்தித் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப். பிகாரின் முந்தைய கூட்டணி ஆட்சியின் பொழுது சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றியவர். திரைப்படத்துறையில் ஆர்வமுள்ள அவர் அப்பொழுதே போஜ்புரி மொழித் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தேஜ் பிரதாப் ஹிந்தியில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் புதனன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  "ருத்ரா - தி அவதார்" என்று படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. போஸ்டரில் அவர் குளிர் கண்ணாடி அணிந்து கொண்டு தோன்றும் காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் 'கம்மிங் சூன்' என்ற வாசகமும் காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.