மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பயோமெட்ரிக், ஆதார் இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தம்: பெங்களூரு மாநகராட்சி எச்சரிக்கை

பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2018, 2:14 pm

பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஊதியம் நிறுத்தப்படும் என பெங்களூரு மாநகராட்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பணி மற்றும் நிதித்துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்தும் விதமாக புது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஊழியரும் தங்களின் பயோமெட்ரிக் முறை வருகைப் பதிவேட்டுடன் ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் வருகிற ஜூலை மாதம் முதல் ஊதியம் நிறுத்தப்படும். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள ஒழுங்கீன நடவடிக்கைகளை ஒழிக்கும் விதமாக இந்த நடைமுறை எடுக்கப்பட்டுள்ளது என்றிருந்தது.

பெங்களூரு மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும் மொத்தம் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படை ஊழியர்கள். சிலர் தற்காலிக பணியாளர்களாகவும் உள்ளனர். 

இதில் ஊழியர்களின் ஒப்பந்தம் மற்றும் பணி வழங்கல் அனைத்தும் பழைய நடைமுறைகளை கொண்டு இயங்கி வருவதால், பணி ஒழுக்கம் சீர்கேடு அடைந்துள்ளது. இதனால் மாநகராட்சி நிதித்துறையில் ஊழல் நடைபெறுகிறது. பெரும்பாலான பணிகளில் சரியான முறையில் நடைபெறுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகள் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.