நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

டிஜிட்டல் இந்தியா அனைவருக்குமானது: பிரதமர் நரேந்திர மோடி

டிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்குமானது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்கானது என்று பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 3:56 pm

Raghavendran

டிஜிட்டல் இந்தியாவின் பயன்பாடு அனைவருக்குமானது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களுக்கானது என்று பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பொது சேவை மையத்தின் வாயிலாக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் வணிகம் சார்ந்து பல்வேறு தரப்பினருடன் நேரில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

டிஜிட்டல் இந்தியா திட்டம் அனைவருக்குமானது, குறிப்பாக கிராமப்புற மக்களின் சேவைக்காக ஏற்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் அதிகளவில் பயனடைந்தால் அதுவே மகிழ்ச்சியானது.

தற்போது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் ரயில் பயணச்சீட்டு உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மின்னணு முறையில் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. தொழில்நுட்பத்தை அனைவரும் செயல்படுத்தும் விதமாக மாற்றி, அனைவரும் எளிய முறையில் அனைத்தையும் பெறுவதுதான் இதன் முக்கிய வெற்றி.

மேலும் மின்னணு முறைப் பணப் பரிவர்த்தனைகளால் இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைந்துள்ளது. அனைவரின் லாபமும் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கே சென்றடைகிறது.

வருகிற ஜூன் 20-ஆம் தேதி இதேபோன்று பொது சேவை மையத்தின் மூலம் நாடு முழுவதிலும் இருந்து 50 முதல் 100 விவசாயிகளிடம் கலந்துரையாட திட்டமிட்டுள்ளேன். அப்போது விவசாயம் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவுள்ளேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.