கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதை அடுத்து அங்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிகோட் மாவட்டம் தாமரசேரி தாலுக்காவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், கரின்சோலா, கக்காயம், புல்லூபம்பாராசாமல், கட்டிப்பாரா மற்றும் வேனப்பாரா ஆகிய மலைச் சாரந்த நிலப்பரப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவால் கரின்சோலா பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன.
பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த தில்னா எனும் 9 வயது சிறுமி உட்பட 4 பேர் இன்று (வியாழக்கிழமை) நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ஹாசன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மற்றும் அப்துர் ரஹ்மான் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் மாயமாகினர்.
இதையடுத்து, அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காணாமல் போன 11 பேரில் 2 பேரை மீட்டெனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அதனால், தேசிய மீட்புப் படையினர் மற்றும் மாநில நிர்வாகம் மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் வருவாய், போலீஸ் மற்றும் இதர துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களை பாதுக்காப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கோழிகோட் மாவட்ட ஆட்சியர் யுவி ஜோஸ் மீட்புப் படையினர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் அவசர கூட்டத்தை நடத்தினார். அமைச்சர்கள் சந்கிரசேகரன், ராமகிருஷ்ணன் மற்றும் சசீந்திரன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தனர்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தாமரசேரி மலைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


