வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

காங்கிரஸ்-மஜத கூட்டணி பலமாக உள்ளது: கர்நாடக அமைச்சர் சிவகுமார்

கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலமாக உள்ளது என கர்நாடக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:16 pm

Raghavendran

கருத்து வேறுபாடு இருந்தது உண்மைதான். ஆனால் காங்கிரஸ்-மஜத கூட்டணி பலமாக உள்ளது என கர்நாடக அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத இடையிலான கூட்டணி ஆட்சி ஏற்படுத்தப்பட்டு மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அமைச்சரவைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. இருப்பினும் இலாகா எதுவும் ஒதுக்கப்படவில்லை. 

இந்நிலையில், அமைச்சரவையின் ஒதுக்கீட்டில் சில உறுப்பினர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது வெளிச்சமானது. இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களும் இதில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதனால் காங்கிரஸ், மஜத கூட்டணியில் இழுபறி சூழ்நிலை ஏற்பட்டது. 

மேலும் இந்த கூட்டணியில் சில எம்எல்ஏ-க்களுக்கு விருப்பமில்லை எனவும், அவர்கள் பாஜக-வில் இணையவிருப்பதாகவும் பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக அமைச்சருமான டி.கே.சிவகுமார் கூறியதாவது:

கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை எடியூரப்பா உணர்ந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் அவர்களின் நிலை தெரியும். எனவே தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை எடியூரப்பா நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் எதிர்கட்சித் தலைவராக அவர் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். 

காங்கிரஸ், மஜத கூட்டணியில் துவக்கத்தில் சிலருக்கு விருப்பமில்லை. இருப்பினும் தற்போது பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அனைத்து கருத்து வேறுபாடுகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத கூட்டணி பலமாக உள்ளது. எனவே இந்த அரசு எந்த பிரச்னையும் இன்றி நடைபெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.