டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால் இடைத்தேர்தல்களில் தோல்வி: போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏக்கள் 

யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:11 pm

UNI

லக்னௌ: யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் 13 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது. இதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக,  அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாநிலத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபமு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஷ்யாம் பிரகாஷ். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:

இந்த அரசின் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். அத்துடன் வேறு சில காரணங்களும் உள்ளன. அரசு மீது எந்த தவறும் இல்லை. அதிகாரிகள்தான் தவறுக்கு காரணம்.

கடந்த அரசை விட இந்த அரசில் ஊழல்கள் அதிகமாக உள்ளது. இதுவே எனதுஅதிருப்திக்கு காரணம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல பலியா  மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:          

குறிப்பிட்ட இரு தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் பிரசாரம் செய்தார். எனவே முதல்வர் தனது தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

ஒட்டு மொத்த அரசும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களின் பலனும் கிடைப்பதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.