பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

போராட்டம் திரும்பப் பெறப்பட்டதில் மகிழ்ச்சி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
Updated On :28 ஜூலை 2018, 3:57 am

லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த 8 நாள்களாக நடைபெற்று வந்த லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை இரவு வாபஸ் பெறப்பட்டது. லாரி உரிமையாளர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,

மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய அளவிலான லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேருதவி செய்துள்ளார். ஏற்கனவே வைக்கப்பட்ட பலதரப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரத்தியேக உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.