ரஃபேல் விமான விவகாரம் குறித்து பேசும் போது பிரதமர் சிரித்தார். அதை குறிக்கும் வகையில், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் இருக்கிறது. அதனை என்னால் உணர முடிகிறது. அவரால் என் கண்களை பார்க்க முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் உண்மை இல்லை என்று பேசியதெல்லாம் மக்களவையில் உச்சத்தை தொட்டது. தொடர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்த ராகுல், கடைசியில் " நீங்கள் என்னை பப்பு என்று அழைத்து அவமானப்படுத்தலாம். ஆனால், என்னிடம் உங்கள் மீது வெறுப்பு கறை இல்லை. அந்த வெறுப்பை உங்களிடம் அன்பாக திரும்ப அளிக்கிறேன்" என்று கூறிவிட்டு பிரதமர் மோடியை நோக்கி சென்றார்.